15 ஜூன், 2010

அதிரை பாரூக்கிற்கு - சிவனின் நல்லருள் கிட்டட்டும் !

திரு அதிரை பாரூக் அவர்களுக்கு,

ஏக இறைவனின் திருப்பெயராலேயே அனைவருக்கும் வாந்தியும் பேதியும் இல்லாமல் போகட்டும்,

தங்களின் இஸ்லாம் சமய இறைச் செய்திகள் நாள் தோறும் மின்அஞ்சல் வழியாக கிடைக்கப் பெற்று மகிழ்ந்தேன். (இதுக்குத்தான் பொது இடத்தில் தப்பி தவறி மின் அஞ்சல்களை வைத்துவிடக் கூடாது). தாங்கள் இந்துக்களிடம் விரும்பி இஸ்லாம் சமய செய்திகளையும், போதனைகளையும் திணிப்பதைப் போலவே உங்களைப் பார்த்து நெக்குறுகி, தங்கள் வழியிலேயே நானும் இந்து சமயம் சார்ந்த தகவல்களையும் படங்களையும் உங்களுக்கு அனுப்பி சமய நல்லிணக்கம் பேணலாம் என்று எண்ணியுள்ளேன். இதற்கு அல்லாவிடமிருந்து எனக்கு எதுவும் எதிர்ப்பு இருக்காது, ஏனெனில் அல்லாவின் கட்டளைகள் தங்களைப் போன்ற இஸ்லாமியர்களுக்கும், முழுமையாக பின்பெற்ற முயலும் மும்மின்களுக்கு மட்டுமே, எனவே உருவ வழிபாட்டுப் படம் நான் உங்களுக்கு அனுப்பி வைப்பதால் எனக்கு ஒன்றும் ஹரம், காரம் எதுவும் இல்லை.

இதோ உங்களுக்காக காந்திஜி வாழ்நாள் எல்லாம் வழியுறுத்த முயன்ற ஈஸ்வரனும் அல்லாவும் ஒன்றே என்பதில் இருக்கும் ஈஸ்வரனின் திருவுருவப்படம். இதை இந்துக்கள் சிவலிங்கம் என்று சொல்லுவார்கள்.



தாங்களும் சிவனை வழிபட்டு நல்லருள் பெறுங்கள். படம் நல்ல பலன் கொடுத்தால் தங்கள் நண்பர்களுக்கும் இந்தப் படத்தை அனுப்பவும்.

ஈஸ்வர அல்லா தேரே.......நாம்.

அல்லாவும் ஈஸ்வரனும் ஏக இறைவனின் வெவ்வேறு திருப்பெயர்கள்.

ஓம் நமசிவாய.......ஓம் நமசிவாய.........!

(அதிரை பாரூக் வலைப்பதிவை படிக்கிறாரா என்பது தெரியவில்லை, அவருக்கு உற்ற நண்பர்கள் இருந்தால் இந்த வலைப்பதிவின் சுட்டியை அவருக்கு அனுப்பி வைத்து ஏக இறைவனின் நல்லருளைப் பெறுங்கள்)

அதிரை பாரூக்கின் மின் அஞ்சல் தொடர்ந்து கிடைக்கப் பெரும் இந்து நண்பர்கள் அவருக்கு இந்த சுட்டியை அனுப்பி வைக்கும் படிக்கேட்டுக் கொள்கிறேன்

40 கருத்துகள்:

  1. ஹி ஹி உங்களை எல்லாம் நினைச்சா பாவமா இருக்கு, தருமி அய்யா, செந்தழல் ரவி, நீங்க எல்லாம் கதறியும் நிப்பாட்டாத அதிரை ஒத்த ஆள் ஒத்த ஆள் மின்னல் சொன்னா கேட்பார்!:))

    மேலும் விவரங்களுக்கு காண்டக்ட் மின்னல்!:))

    பதிலளிநீக்கு
  2. இஃகி இஃகி இஃகி! கோவியாரே நீர் இவ்வளவு வெள்ளந்தியான ஆளா??

    இன்னிக்கு எனக்கே கோவம் வந்து "வேண்டாம் விட்டுடு அழுதுடுவேன்"ன்னு மிரட்டி பார்த்தேன். உடனே வச்சாரு பாருங்க ஆப்பு ....தொடர்ந்து ஏழு மெயில்... ஆக இந்த பதிவுக்கு உங்களுக்கு தொடர்ந்து 108 மெயில் வர அந்த ஆண்டவனை வேண்டிக்கிறேன்!

    சரி! உங்க ஆசையை ஏன் கெடுப்பானேன். அதிரைக்கு அனுப்பி வச்சுட்டா போச்சு!

    பதிவிலே ஒரு வரி சேர்த்திருக்கலாம். "இதை காணும் அன்பர்கள் இந்த லிங்கை 7 தடவை அதிரை பாரூக்குக்கு அனுப்பினால் நைஜீரியா லாட்டரி அடிக்கும். அனுப்பாதவர்கள் ரத்தம் கக்கி சாவாங்க"ன்னு சேர்த்து விட்டிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  3. இந்த கொடுமைய தட்டி கேட்க ஆளெ இல்லையா

    பதிலளிநீக்கு
  4. (இதுக்குத்தான் பொது இடத்தில் தப்பி தவறி மின் அஞ்சல்களை வைத்துவிடக் கூடாது)]


    மறுக்க கூடாத உண்மை.

    பதிலளிநீக்கு
  5. அதிரை பாரூக்குக்கு நீங்கள் இமெயிலிலேயே இந்த படத்தை அனுப்பியிருக்கலாமே.

    //போதனைகளையும் திணிப்பதைப் போலவே //

    தேவையில்லை(உங்களுக்கு)என்கிற பட்சத்தில் அந்த மெயிலை டெலிட் செய்தால் போச்சி.அதிரை பாரூக்கிடமிருந்து இமெயில் வந்தால் அதை இமெயிலில் பதில் சொல்வதை விட்டுவிட்டு பொதுவில் சொல்வது நாகரீகமற்ற செயல்..

    //(இதுக்குத்தான் பொது இடத்தில் தப்பி தவறி மின் அஞ்சல்களை வைத்துவிடக் கூடாது///

    நீங்கள் ஒன்றும் வி.ஐ.பி இல்லையே.
    தற்பெருமை அதிகமா இருக்கு.

    பதிலளிநீக்கு
  6. //வலைத்தமிழன் said...

    அதிரை பாரூக்குக்கு நீங்கள் இமெயிலிலேயே இந்த படத்தை அனுப்பியிருக்கலாமே.

    லாமே, அண்ணாரின் சேவையை எல்லோரும் தெரிந்து கொண்டு புகழடையட்டுமே உங்களுக்கு என்ன கஷ்டம்.

    //தேவையில்லை(உங்களுக்கு)என்கிற பட்சத்தில் அந்த மெயிலை டெலிட் செய்தால் போச்சி.அதிரை பாரூக்கிடமிருந்து இமெயில் வந்தால் அதை இமெயிலில் பதில் சொல்வதை விட்டுவிட்டு பொதுவில் சொல்வது நாகரீகமற்ற செயல்..//

    நீங்க ரொம்ப நல்லவரு, உங்க பெரும் தன்மை எனக்கு இல்லிங்க


    // நீங்கள் ஒன்றும் வி.ஐ.பி இல்லையே.
    தற்பெருமை அதிகமா இருக்கு.//

    இருந்தால் தப்பில்லையே, காசா பணமா ?

    பதிலளிநீக்கு
  7. நான் முஸ்லிமாக மாறியதில் இருந்து அதிரை பாருக் எனக்கு மின்னஞ்சல் அனுப்புவதை நிறுத்திவிட்டார்.

    பதிலளிநீக்கு
  8. ஹூ இஸ் தேட் டர்ட்டி ஹிப்போபுட்டாமஸ்? நம்ம கையில ஆள குடுங்க, படுவா பிச்சிடறேன்!

    பதிலளிநீக்கு
  9. இமெயில் மார்கெட்டிங் பற்றி ( எல்லாக் காலத்துக்கும் பொறுந்தும் , எல்லா விஞ்ஞானத்திற்கும் அடிப்படையான)திரு குரானில் அல்லது ஹ‌தீசில் குறிப்புகள் உள்ளதா?

    நல்ல முஸ்லீம் குரானில் சொன்னதைத்தவிர ஏதும் செய்ய மாட்டார்.

    நீங்கள் சொல்லியுள்ள நண்பர் மிக நல்லவர் உங்களை நல்வழிப்படுத்த உதவிசெய்கிறார்.

    நன்றியுடன் இருங்கள்.

    உங்கள்மீதும் கருணை பொழியட்டும் இறைவன்.

    பதிலளிநீக்கு
  10. உங்களுக்குமா?
    அவர் தொல்லை தாங்கலை

    ////////
    தேவையில்லை(உங்களுக்கு)என்கிற பட்சத்தில் அந்த மெயிலை டெலிட் செய்தால் போச்சி.அதிரை பாரூக்கிடமிருந்து இமெயில் வந்தால் அதை இமெயிலில் பதில் சொல்வதை விட்டுவிட்டு பொதுவில் சொல்வது நாகரீகமற்ற செயல்..
    ///////

    அய்யா விவரம் தெரியாம பேசுராரு
    ஏஆர் ரகுமன் ஆஸ்கர் வாங்குனப்ப அவரையும் இசையையும் திட்டி ஒரு மெயில் வந்துச்சு
    எனக்கு பிடிக்கல இனி அனுப்ப வேண்டாமுனு அதுக்கு முன்னடி பலமுறை பதில் அனுப்பியும் கேக்கலை

    பதிலளிநீக்கு
  11. .
    அன்புள்ள வலைத்தமிழன்,
    இமெயில் மார்கெட்டிங்கில் மதம் விற்பது என்பது நல்ல விசயம். வாளால் பரவிய மதம் என்ற புறங்கூறும் சாத்தான் வழி வந்த காபிர்களை எதிர்கொள்ள அவர்களை மறுத்து விவாதம் செய்ய நல்ல வாய்ப்பு.

    பாருங்கள், இப்போது எல்லாம் டெக்னாலஜிக்கு ஏற்ப இமெயில் மார்கெட்டிங்கில் மதம் விற்க கிளம்பியாகிவிட்டது. இதை மட்டும் கோவி இங்கே பகிரவில்லை என்றால் பலருக்கு இப்படி ஒரு இமெயில் மார்கெட்டிங்கில் மதம் விற்பது த்ரிந்து இருக்காது.

    கோவியால் பலரும் இமெயில் மார்கெட்டிங்கில் மதம் வாங்கி பயனைடைவார்கள். உண்மையில் நாம் நன்றி சொல்லவேண்டும் கோவிக்கு.

    உங்களின் மீது இறைவன் கருணை காட்டட்டும்.

    கோவி காபீராக இல்லாமல் மதத்தில் இருந்து வாழும் மார்க்கத்திற்கு மாறுங்கள். இமெயில் மார்கெட்டிங்கில் மதம் விற்பது வாழ்க!

    .

    பதிலளிநீக்கு
  12. \\தேவையில்லை(உங்களுக்கு)என்கிற பட்சத்தில் அந்த மெயிலை டெலிட் செய்தால் போச்சி.அதிரை பாரூக்கிடமிருந்து இமெயில் வந்தால் அதை இமெயிலில் பதில் சொல்வதை விட்டுவிட்டு பொதுவில் சொல்வது நாகரீகமற்ற செயல்..\\
    அதல்லாம் வாஸ்த்தவம் தான் வலைதமிழன்! நல்ல மாட்டுக்கு எத்தனை சூடுன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?

    ஒரு தடவை இல்லை பல தடவை திரும்பவும் மெயில் பண்ணியாச்சு. அந்த மெயிலை பிளாக் பண்ணியும் பார்த்தாச்சு. பின்னே வேற வேற ஐடில வந்து இதே தொல்லை கொடுத்தா என்ன செய்யட்டும்?

    தருமி அய்யா, செந்தழல் ரவி எல்லாரும் பதிவும் போட்டு பார்த்தாச்சு. அப்பவும் விடலையே.

    பின்ன எல்லாரும் சேர்ந்து கெஞ்சி பார்த்தாச்சு.

    இப்ப சொல்லுங்க இதை பொதுவில் வைத்தா என்ன தப்புன்னு!!!

    பதிலளிநீக்கு
  13. அதிரை பரூக் கிட்டேருந்து எனக்கும்தான் மின்னஞ்சல் வருது, பக்கத்து ஊர் காரராச்சேன்னு நான் ஒன்னும் சொல்றதுல்ல. மின்னஞ்சலை கண்டவுடன் குப்பைக்குக்கூட அனுப்புவதில்லை, நீக்கி விடுகிறேன்!

    நீங்க இந்துக்களை எல்லாம் தாக்குன ஒடனே, நான் நீங்க இந்து பதிவர் இல்லைன்னு நினைச்சுட்டேன்!

    நீங்க மதங்களைத் துறந்தவர்ன்னு நினைச்சு ஏமாந்து போயிட்டேனே! :) துரதுரவர்ன்னு தெரியாமப் போச்சே!

    அவரு நல்லவருங்க! அவர விட்டுருங்க!

    ஆனா ஒரு உண்மைய சொல்லட்டுமா?

    இந்து,கிறித்துவர்,கத்தோலிக்கர்,பெளத்தர்,சீக்கியர் என்று இந்த உலகத்தில் யாரும் இல்லை. பிறக்கின்ற ஒவ்வொரு மனிதரும் இஸ்லாமியரே! அதை மனதில் வைத்துக்கொண்டால் இந்தப் பதிவுக்கே அவசியம் வந்திருக்காது! அந்த எண்ணத்தில் தான் அவர் எல்லோருக்கும் மின்னஞ்சல் அனுப்புகிறார். அவர் மீது தவறு ஏதும் இல்லை. உங்களை மதம் மாற்ற அவர் விரும்பவில்லை. இஸ்லாம் மதத்தில் ஏற்கனவே இருக்கும் உங்களை எதற்கு அவர் மதம் மாற்ற வேண்டும்?

    பதிலளிநீக்கு
  14. இன்னைக்கு தான் நான் கணக்கை பைசல் பண்ணினேன்!

    பதிலளிநீக்கு
  15. //அத்திவெட்டி ஜோதிபாரதி said...

    இந்து,கிறித்துவர்,கத்தோலிக்கர்,பெளத்தர்,சீக்கியர் என்று இந்த உலகத்தில் யாரும் இல்லை. பிறக்கின்ற ஒவ்வொரு மனிதரும் இஸ்லாமியரே! அதை மனதில் வைத்துக்கொண்டால் இந்தப் பதிவுக்கே அவசியம் வந்திருக்காது! //
    ..

    இஸ்லாம் மதத்தில் ஏற்கனவே இருக்கும் உங்களை எதற்கு அவர் மதம் மாற்ற வேண்டும்?//


    வேண்டாம் ..அழுதிருவோம். ஏன் இந்த அலும்பு. முடியல ஜோதி. அதுக்கு பருக்கே ரொம்ப நல்லவரா இருப்பாருபோல.

    பதிலளிநீக்கு
  16. //வேண்டாம் ..அழுதிருவோம். ஏன் இந்த அலும்பு. முடியல ஜோதி. அதுக்கு பருக்கே ரொம்ப நல்லவரா இருப்பாருபோல.
    //

    அன்பின் கல்வெட்டு ஐயா,

    அவரு(அதிரை பரூக்) நல்லவருன்னுதான் என்னொட முந்தைய கமாண்டுல சொல்லியிருக்கேனே!

    பதிலளிநீக்கு
  17. //அத்திவெட்டி ஜோதிபாரதி said...

    அவரு(அதிரை பரூக்) நல்லவருன்னுதான் என்னொட முந்தைய கமாண்டுல சொல்லியிருக்கேனே!//

    :-)))

    ஆம அவரு நல்லவர்தான். நாம் எல்லாரும் சொல்வதும் அதுதான். இமெயிலில் மதம் மார்க்கெட் புண்ணியவான். :-))

    .

    ஜோதிபாரதி நான் உங்க லொள்ளைச் சொன்னேன் nothing serious :-))

    பதிலளிநீக்கு
  18. Kovi,

    avar "ubuntu philosophy" follow panrar pola ,namum athe panna thappilai.

    Ithu pola enaku email spam panna nabar mail id ya adult site mailing listla kothu vitten etho nammala mudinja kaimaaru,neenga nallavar appadilam seyya maatinga!

    பதிலளிநீக்கு
  19. // குசும்பன் said...

    ஹி ஹி உங்களை எல்லாம் நினைச்சா பாவமா இருக்கு, தருமி அய்யா, செந்தழல் ரவி, நீங்க எல்லாம் கதறியும் நிப்பாட்டாத அதிரை ஒத்த ஆள் ஒத்த ஆள் மின்னல் சொன்னா கேட்பார்!:))

    மேலும் விவரங்களுக்கு காண்டக்ட் மின்னல்!:))//

    சஞ்செய் பெயர் விடுபட்டுவிட்டது.
    :)

    பதிலளிநீக்கு
  20. // ..:: Mãstän ::.. said...

    :)

    கிடைக்கட்டும் கிடைக்கட்டும்//

    நன்றி மஸ்தான்

    பதிலளிநீக்கு
  21. // துளசி கோபால் said...

    அடராமா!!!!!//

    தேவுடா தேவுடா !
    :)

    பதிலளிநீக்கு
  22. //அபி அப்பா said...

    இஃகி இஃகி இஃகி! கோவியாரே நீர் இவ்வளவு வெள்ளந்தியான ஆளா??

    இன்னிக்கு எனக்கே கோவம் வந்து "வேண்டாம் விட்டுடு அழுதுடுவேன்"ன்னு மிரட்டி பார்த்தேன். உடனே வச்சாரு பாருங்க ஆப்பு ....தொடர்ந்து ஏழு மெயில்... ஆக இந்த பதிவுக்கு உங்களுக்கு தொடர்ந்து 108 மெயில் வர அந்த ஆண்டவனை வேண்டிக்கிறேன்!

    சரி! உங்க ஆசையை ஏன் கெடுப்பானேன். அதிரைக்கு அனுப்பி வச்சுட்டா போச்சு!

    பதிவிலே ஒரு வரி சேர்த்திருக்கலாம். "இதை காணும் அன்பர்கள் இந்த லிங்கை 7 தடவை அதிரை பாரூக்குக்கு அனுப்பினால் நைஜீரியா லாட்டரி அடிக்கும். அனுப்பாதவர்கள் ரத்தம் கக்கி சாவாங்க"ன்னு சேர்த்து விட்டிருக்கலாம்.//

    முடிஞ்ச அளவுக்கு அவரை கிண்டல் அடிக்காமல் புரிய வைக்க முயற்சித்து இருக்கிறேன். நீங்கள் சொல்வதை எழுதினால் அவரை தாக்குவதாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  23. // ஆர்.கே.சதீஷ்குமார் said...

    இந்த கொடுமைய தட்டி கேட்க ஆளெ இல்லையா//

    பசங்கப் படத்து ஹீரோக்களை அழைக்கனும்.
    :)

    பதிலளிநீக்கு
  24. // Dr.P.Kandaswamy said...

    ஒரு ஆஜர் போட்டுக்கிறேன்.//

    நன்றிங்க ஐயா

    பதிலளிநீக்கு
  25. //karrupu said...

    (இதுக்குத்தான் பொது இடத்தில் தப்பி தவறி மின் அஞ்சல்களை வைத்துவிடக் கூடாது)]


    மறுக்க கூடாத உண்மை.//

    நன்றிங்க

    பதிலளிநீக்கு
  26. // செந்தழல் ரவி said...

    நான் முஸ்லிமாக மாறியதில் இருந்து அதிரை பாருக் எனக்கு மின்னஞ்சல் அனுப்புவதை நிறுத்திவிட்டார்.//

    அஸ்ஸலாம் அலைக்கும் !

    ரவி,
    சொல்லவே இல்லையே, தெரிந்து இருந்தால் சங்கம் பதிவில் வாழ்த்துகள் போட்டு இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  27. // பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ஹூ இஸ் தேட் டர்ட்டி ஹிப்போபுட்டாமஸ்? நம்ம கையில ஆள குடுங்க, படுவா பிச்சிடறேன்!//

    ஐயோ அதெல்லாம் வேணாங்க

    பதிலளிநீக்கு
  28. கல்வெட்டு,

    பிரியமுடன் பிரபு,

    ஜோதி பாரதி,

    ஸ்டார்ஜன்

    நன்றி !

    பதிலளிநீக்கு
  29. //சஞ்செய் பெயர் விடுபட்டுவிட்டது.
    :)//

    ஹிஹி... கோவியாரே.. இந்தப் பொறம்போக்கெல்லாம் நமக்கு ஒரு மேட்டரே இல்ல.. இந்த பன்னாடை அனுப்பும் மெயில் எதுவும் தற்போது எனக்கு வருவதில்லை.. வரவும் வராது.. அவன் எப்படி வேண்டுமாமாலும் முயற்சிக்கலாம். :))

    பதிலளிநீக்கு
  30. இனி வக்காலத்து வாங்க வரும் மதவெறியர்களை தொடர்வதற்காக,

    பதிலளிநீக்கு
  31. கோவியாரே, சிவனேன்னு கிடப்பவரை உங்க பிரச்சனையில ஏன் இழுக்குறீங்க :-)

    பதிலளிநீக்கு
  32. http://kaladi.blogspot.com/2010/05/blog-post.html

    இதைப் பாருங்க. எனக்கும் பதில் வந்திருக்கு ???? என்று போட்டு. வராதுன்னு ஒரு நம்பிக்கைதான்.

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !