19 ஜனவரி, 2009

போர் நிறுத்தம் மன்மோகன்சிங் உறுதி !

கலைஞர் : மிஸ்டர் சிங், எங்க கூட்டணிக் கட்சிகளின் போர் நிறுத்த கோரிக்கை என்ன ஆச்சு ?

சிங் : அதைப் பரிசீலித்து தான், இந்திய கிரிக்கெட் அணியை இலங்கை அனுப்புறோம்

கலைஞர் : அவங்க பேச்சு வார்த்தை நடத்தப் போறாங்களா ?

சிங் : கலைஞர் ஜி, அவங்க பேச்சு வார்த்த நடத்த போகலை, விளையாடப் போறங்க, இவங்க அதிரடி கிரிக்கெட் ஆட்டத்தை இலங்கை இராணுவம் அவ்வப்போது போரை நிறுத்திவிட்டு பார்ப்பாங்க.

கலைஞர் : சோனிய ஜி வாழ்க.


பின்குறிப்பு : இலங்கையில் நடக்கும் தமிழின துடைத்தொழிப்பை இந்தியா கண்டுகொள்ளவில்லை, இலங்கையுடன் இந்திய உறவு உறுதிப்பட்டு கிடக்கிறது என்று உலக நாடுகளுக்கு காட்டவே இந்த இலங்கை - இந்திய கிரிக்கெட் ஆட்டம் இந்த வேளையில் நடக்கிறது. சிங்களர்களுக்கு உற்சாகம் தர இந்திய அணியை அனுப்பும் சோனிய காங்கிரஸ் கட்சியும், அவர்தம் தமிழக கூட்டணி கட்சிகளும் வாழ்க ! வாழ்க !! வாழ்க !!!

10 கருத்துகள்:

  1. ஒ! இப்படியும் யோசிக்கலாமோ?

    இருக்கும்,
    நடக்கும்,
    நிறுத்தம் இருக்கும்,
    கொஞ்சம் பொறுப்போம்,
    மேனன் செம்மீனும், சிறி லங்கா நண்டும் சாப்பிட்டுட்டு வரட்டும். பிரதமர் உணர்வுகளைப் புரிந்து கொண்டார்.

    பதிலளிநீக்கு
  2. தமிழனின் கஷ்டங்களும் கண்ணீரும் ஒரே விளையாட்டா போச்சு!!!! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
    காலம் தான் பதில் சொல்லவேண்டும்

    பதிலளிநீக்கு
  3. தலைப்ப பார்த்து வந்தா...ஓ ஹோ..
    பதவிகளுக்காக காலடியில் விழுந்துகிடக்கும் அடிவருடிகள் இருக்கும்வரை., எந்த சிங்ஜிக்களுக்கும் சோஜிக்களுக்கும் வட இந்திய பெரு முதலைகளுக்கும் தமிழனின் உயிர்...--யிருக்குத்தான் சமானம்.

    பதிலளிநீக்கு
  4. ஆளை கொல்ல அந்தப்பக்கம் ஆயுதம்....இந்த பக்கம் பொழுது போக கிரிக்கெட்...வாழ்க நமது சனநாயக அரசுகள்.

    பதிலளிநீக்கு
  5. பிரதமர் நாத்தழுதழுக்க கூறியதைக்கேட்டு கண்கள் பனித்தது..இதயம் இனித்தது

    பதிலளிநீக்கு
  6. சனவரி 26 ஆம் தேதி அதாவது குடியரசுத் தினத்தன்று நாம் நம் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி இந்தியாவைப் புறக்கணிக்க வேண்டும். இது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்

    பதிலளிநீக்கு
  7. என்னுடன் சேர்த்தே வயிற்றெரிச்சல் பட்ட அனைவருக்கும் நன்றி !

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !