6 அக்டோபர், 2008

சிங்கைப் பதிவர்கள் கலந்து கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி !

எதிரொலி என்னும் சமூகம் சார்ந்த ஒரு அரைமணி நேர தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபெறும் வாய்ப்புக் கிடைத்தது. அதில் நாங்கள் பங்குபெறுவது ஒரு ஏழு நிமிடம் தான்.



நண்பர் பாரி.அரசு, நண்பர் ஜோதிபாரதி மற்றும் நான் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்தோம். வீடியோ ரெக்கார்டிங் சாதனம் கைவசம் இல்லாததால் வெப் காம் மூலம் எடுத்தேன். ஓரளவு சரியாக இருக்கிறது. முதன் முறை என்பதால் கூச்சமாக இருந்தது. :)

வீடியோவில் எனக்கு முன் அமர்ந்து பேசுபவர் தான் பதிவர் நண்பர் சதக்கத்துல்லா. அவர்தான் நிகழ்ச்சியை வடிவமைத்து எங்களை பங்குபெற வைத்தார். அவருக்கும் நன்றி !

முந்தைய பதிவில் குசும்பன் பின்னூட்டத்தில் ஓட்டியது போல் சிங்கை சின்னத் திரை சிவாஜியா ? என்னன்னு பார்த்துச் சொல்லுங்கப்பா ! :) அங்கே பின்னூட்டத்தில் வாழ்த்திய அனைவருக்கும், படக்காட்சி பார்க்கும் அனைவருக்கும் நன்றி !

45 கருத்துகள்:

  1. எதிரோலின்னா பேசுனதே திரும்ப திரும்ப கேட்குமா

    பதிலளிநீக்கு
  2. //நாங்கள் பங்குபெறுவது ஒரு ஏழு நிமிடம் தான்.//

    அவை ஏழரை நிமிடங்கள் ஆகாமல் போனதற்கு வாழ்த்துக்கள்.
    (ஏழரை=சொதப்பல்)

    பதிலளிநீக்கு
  3. ஆங்கிலம் கலக்காமல் மிக நன்றாகவே கலந்து கொண்ட அணைவரும் பேசியிருக்கீங்க. இன்னும் நிறைய பேரை சிங்கையில இருந்து எழுதக் கொண்டு வருமின்னு நினைக்கிறேன், இந் நிகழ்ச்சி.

    கலந்து கொண்ட உங்களுக்கு எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  4. கோவியாரின் கேமெரா கோணம் அருமை.

    விஞ்ஞான வளர்ச்சியில் பதிவர்களாக இருக்கிறோம்.

    ஒரு நிகழ்ச்சியை பதிவு செய்ய இயலவில்லை!

    இவ்வளவு சிரத்தை எடுத்து பதிவைப் பதிவாப் போட்டுருக்கீங்க! நன்றி!!

    பதிலளிநீக்கு
  5. பின்னூட்ட மழை பொழிந்த வால்பையனுக்கு நன்றி !

    பதிலளிநீக்கு
  6. //நாமக்கல் சிபி said...
    சிட்டி பாபு மாதிரியே இருக்கீங்க!

    10:58 PM, October 06, 2008
    //

    சிபி சாரே,
    உன்னை இருமுறை பார்த்து இருக்கிறேன். சிட்டிபாபு, சிட்டிசன் இன்னும் என்ன என்ன சொல்லுவே ?

    பதிலளிநீக்கு
  7. //Thekkikattan|தெகா said...
    ஆங்கிலம் கலக்காமல் மிக நன்றாகவே கலந்து கொண்ட அணைவரும் பேசியிருக்கீங்க. இன்னும் நிறைய பேரை சிங்கையில இருந்து எழுதக் கொண்டு வருமின்னு நினைக்கிறேன், இந் நிகழ்ச்சி.

    கலந்து கொண்ட உங்களுக்கு எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!!
    //

    தெகா பாராட்டுக்கு நன்றி !

    பதிலளிநீக்கு
  8. //ஜோதிபாரதி said...
    கோவியாரின் கேமெரா கோணம் அருமை.

    விஞ்ஞான வளர்ச்சியில் பதிவர்களாக இருக்கிறோம்.

    ஒரு நிகழ்ச்சியை பதிவு செய்ய இயலவில்லை!

    இவ்வளவு சிரத்தை எடுத்து பதிவைப் பதிவாப் போட்டுருக்கீங்க! நன்றி!!
    //

    ஜோதி,

    ரெக்கார்டர் எல்லாம் இருந்து எடுத்து இருந்தால் இவ்வளவு விரைவாக ஏற்றி இருக்க முடியாது!
    :)

    பதிலளிநீக்கு
  9. //சிபி சாரே,
    உன்னை இருமுறை பார்த்து இருக்கிறேன். சிட்டிபாபு, சிட்டிசன் இன்னும் என்ன என்ன சொல்லுவே ?
    //

    சத்தியமாதாங்க! அசத்தப் போவது யாரு சிட்டி பாபு மாதிரிதான் இருக்கீங்க!

    வேணும்னா துண்டைப் போட்டுத் தாண்டுறேன்!

    (மதன் பாப் மாதிரின்னு சொல்லாம விட்டேன்னு சந்தோஷப் படுங்க)

    பதிலளிநீக்கு
  10. வாழ்த்துகள் பதிவர்கள் கோவி கண்ணன், பாரி அரசு, ஜோதிபாரதி..

    உங்களால் பலரும் இந்த ஜோதியில் களம் இறங்கட்டும்..

    பதிலளிநீக்கு
  11. அடுத்த முறை கூச்சப்படாம அடிச்சு பறத்துங்க. :)

    பங்குபெற்ற அனைவருக்கும் நிகழ்ச்சி தயாரித்தளித்தவர்களுக்கும் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  12. பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. கலக்கல் கோவி., ஏன் பேச்சில் தயக்கம்? சபைக்கூச்சமா? சபை பயமா?
    ஒருவேளை சரியான முறையில் ரிகார்ட் செய்திருந்தால் இவை தெரிந்திருக்காதோ

    பதிலளிநீக்கு
  14. கோவி சார், ஆண்கள் காண்டம் வாங்க மட்டும் கூச்சப்படறது இல்ல போல ! ஆனா நீங்க வேல செய்யற மாதிரி இருக்கற க்ளோஸ் அப் ஷாட்ஸ் எல்லாம் சூப்பர். அதுல எல்லாம் இயற்கையா இருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  15. ******** எதிரோலின்னா பேசுனதே திரும்ப திரும்ப கேட்குமா ********
    அது தெரியல. ஆனா உங்க கமெண்ட் மட்டும் திருப்பி திருப்பி வருது. அது என்ன பழக்கம் ? ஒரே கமெண்ட்ல எல்லாம் எழுத வேண்டியது தான.

    பதிலளிநீக்கு
  16. இனிய பாராட்டுகள் உங்கள் மூவருக்கும்.

    எல்லாம் இயல்பாத்தான் இருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  17. //விஜய் ஆனந்த் said...
    அண்ணே....கலக்குறீங்க!!!

    வாழ்த்துக்கள்!!!
    //

    விஜய் ஆனந்த்,

    நன்றி !

    பதிலளிநீக்கு
  18. //ஜோ / Joe said...
    அருமை கோவியாரே!

    11:53 PM, October 06, 2008
    //

    ஜோ,
    நீங்களும் இடப்பெற்றிருக்க வேண்டிய நிகழ்ச்சி ! சூழல் காரணமாக நீங்கள் பங்கு கொள்ளமால் போனதற்கு சிறிது வருத்தமே.

    பதிலளிநீக்கு
  19. //'டொன்' லீ said...
    வாழ்த்துகள் பதிவர்கள் கோவி கண்ணன், பாரி அரசு, ஜோதிபாரதி..

    உங்களால் பலரும் இந்த ஜோதியில் களம் இறங்கட்டும்..
    //
    டொன் லீ,
    நன்றி !

    பதிவர் ஜோதி களத்தில் இறங்கிட்டாரே !

    பதிலளிநீக்கு
  20. //சிறில் அலெக்ஸ் said...
    அடுத்த முறை கூச்சப்படாம அடிச்சு பறத்துங்க. :)

    பங்குபெற்ற அனைவருக்கும் நிகழ்ச்சி தயாரித்தளித்தவர்களுக்கும் பாராட்டுக்கள்.
    //

    சிறில்,

    திருமண வீடியோவுக்குப் பிறகு முதன் முறையாக வீடியோவில் தலைக்காட்டியது சற்று கூச்சமாகத்தான் இருந்தது.

    பாராட்டுக்கு நன்றி !

    பதிலளிநீக்கு
  21. //தருமி said...
    பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    12:45 AM, October 07, 2008
    //

    நன்றி தருமி ஐயா !

    பதிலளிநீக்கு
  22. // cheena (சீனா) said...
    பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்
    //

    சீனா ஐயா,

    நன்றி !

    பதிலளிநீக்கு
  23. //T.V.Radhakrishnan said...
    கலக்கல் கோவி., ஏன் பேச்சில் தயக்கம்? சபைக்கூச்சமா? சபை பயமா?
    ஒருவேளை சரியான முறையில் ரிகார்ட் செய்திருந்தால் இவை தெரிந்திருக்காதோ
    //

    ராதாகிருஷ்ணன் ஐயா, பாராட்டுக்கு நன்றி !

    உண்மையிலேயே கூச்சமாகத்தான் இருந்தது.

    கூச்சமில்லாமல் பழக உங்கள் மேடை நாடகங்களில் கலந்து கொண்டு பயிற்சிப் பெறுகிறேன். வாய்ப்புக் கொடுங்கள், 'சார் போஸ்ட்..' என்று சொல்லும் சிறுவேடமாக இருந்தாலும் பரவாயில்லை.

    பதிலளிநீக்கு
  24. //மணிகண்டன் said...
    கோவி சார், ஆண்கள் காண்டம் வாங்க மட்டும் கூச்சப்படறது இல்ல போல ! ஆனா நீங்க வேல செய்யற மாதிரி இருக்கற க்ளோஸ் அப் ஷாட்ஸ் எல்லாம் சூப்பர். அதுல எல்லாம் இயற்கையா இருக்கீங்க.
    //

    மணிகண்டன்,

    சரிதான், பேசும் போது ஆங்கிலம் கலக்கமால் பேச வேண்டும் என்ற மூச்சுத்திணறல் இருந்தது. அந்த கட்டுபாடு இல்லாதால் வேலை செய்வது போல் இருக்கும் படம் இயற்கையாக வந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  25. //துளசி கோபால் said...
    இனிய பாராட்டுகள் உங்கள் மூவருக்கும்.

    எல்லாம் இயல்பாத்தான் இருக்கீங்க.

    9:42 AM, October 07, 2008
    //

    துளசி அம்மா,

    பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  26. எழுத்துக்களைப் படித்திருந்தேன். இன்று பேசுவதையும் பார்த்தேன்/கேட்டேன். :-)

    பதிலளிநீக்கு
  27. //குமரன் (Kumaran) 10:17 AM, October 07, 2008
    எழுத்துக்களைப் படித்திருந்தேன். இன்று பேசுவதையும் பார்த்தேன்/கேட்டேன். :-)
    //

    குமரன், உங்களிடம் தொலைபேசியில் பேசி இருக்கிறேன். எனது குரலைக் ஏற்கனவே கேட்டு இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  28. நேற்று எதிரொலி நிகழ்ச்சி பார்த்தேன். நீங்கள் ரொம்ப பதட்டமாக பேசினீர்கள். வார்த்தைகள் தடுமாறியது. போட்டோவில் பார்த்ததற்கு தொலைகாட்சியில் ரொம்ப இளமையாகவும் இருக்கிறீர்கள்.
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  29. வாழ்த்துகள் கோவி.

    ஏனைய வலைப்பதிவு நண்பர்களையும் பார்த்ததில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  30. //ஜோ,
    நீங்களும் இடப்பெற்றிருக்க வேண்டிய நிகழ்ச்சி ! சூழல் காரணமாக நீங்கள் பங்கு கொள்ளமால் போனதற்கு சிறிது வருத்தமே.//

    ஆம்..எனக்கும் வருத்தமே .

    பதிலளிநீக்கு
  31. பாராட்டுக்கள் கோவி மற்றும் மற்ற பதிவர்களுக்கு. கண்டிப்பாக இது இன்னும் நிறைய மக்களை வலையுலகம் நோக்கி இழுக்கும் என்பதில் சந்தேகமில்லை. நல்ல புரொஃபசனலாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  32. விடியோ தரம் நன்றாகவே இருக்கு.பேச்சை இங்கு இந்த கணினியில் கேட்கமுடியவில்லை.பிறகு கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு
  33. ரொம்பவே தெளிவாத்தான் இருக்கு கோவியாரே... :)

    //வீடியோ ரெக்கார்டிங் சாதனம் கைவசம் இல்லாததால் வெப் காம் மூலம் எடுத்தேன். ஓரளவு சரியாக இருக்கிறது. முதன் முறை என்பதால் கூச்சமாக இருந்தது. :)//

    இதுக்கு நோ கமெண்ட்ஸ்.. :))

    பதிலளிநீக்கு
  34. பதிவுலக சிங்கம் என்று அடைமொழிப் போடாததைக் கண்டிக்கிறேன்..

    ஃஃஃஃஃஃ

    பாரியின் முகத்திலே ஏதோ ஒரு களை என்னவென்று சொல்வபருக்கு எதுவும் இல்லை..

    ஃஃஃஃஃஃ

    வாழ்த்துக்கள்.....!! வாழ்க...!! வளர்க !!

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !