26 ஆகஸ்ட், 2008

வடுவூர் குமார் அப்பாவியா ?

வடுவூர் குமார் ஆன்மிக பதிவர் மற்றும் கட்டுமானத்துறை பற்றி பதிவு எழுதுபவர் என்று தான் நினைத்துக் கொண்டு இருந்தேன். பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டாலும் குறைவாக பேசுவார்.

இவர் அடிக்கும் லூட்டி இப்பொழுதுதான் தெரிந்தது, கூகுள் ஸ்டேட்ஸ் மெசேஜ் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். கமலஹாசன் ரசிகராக இருப்பார் போல...நீங்களே பாருங்க மக்கள்ஸ்...இவர் ரொம்ப நேரம் எடுத்துக் கொள்வாராம் !

எதுக்கா ?




'கொஞ்ச' நேரமாகுமாம். மெசேஜ் யாருக்குன்னு தெரியவில்லை. யாராவது கண்டுபிடித்துச் சொன்னால் அண்ணியிடம் சொல்லி குமார் அண்ணனை கண்காணிக்கச் சொல்வேன். அண்ணி சீதையை போல் அண்ணனையே நினைத்துக் கொண்டிருக்க அண்ணன் யாருக்கோ மெசேஜ் விட்டுக் கொண்டு இருக்கிறார்.

அந்த பக்கம் சாட்டில் என்ன மெசேஜாக இருக்கும் ? 'கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சிப் பேசக் கூடாதா ?' ன்னு தானே

வடுவூர் அண்ணனை கலாய்பவர்கள் கலாய்கலாம், பின்னூட்ட பெட்டி மாடுரேசன் இன்றி திறந்தே இருக்கிறது. எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாரு !

:)

63 கருத்துகள்:

  1. கோவி கண்ணன் எல்லாரும் முடிந்தது இனி சிக்குனது வடுவூர் குமார் அவர்களா!

    அவர் பாட்டுக்கும் எந்த பிரச்சனையிலும் மாட்டாம இருக்காரு..அவரை பிடித்து லொள்ளு பண்ணிட்டு இருக்கீங்க..:-))))

    ஆமா இத்தனை பதிவு போட்டு தள்ளுறீங்க.... உங்க மனைவி எப்போதும் நீங்க கம்ப்யூட்டர் கூடவே இருக்கீங்கன்னு சண்டைக்கு வர போறாங்க :-))) இப்ப இல்லைனாலும் விரைவில்

    பதிலளிநீக்கு
  2. ஒரு “ம்” தான் விட்டுப்போச்சு அதற்கு இப்படியா? :-))
    அண்ணியெல்லாம் கவலைப்படமாட்டாங்க...கல்யாணமாகி 20 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.
    பார்ப்போம் யார் யார் வருகிறார்கள் என்று.

    பதிலளிநீக்கு
  3. கொஞ்சறதுக்கே நேரமாகுமாம்....கிகிகிகி!

    குமார், சமாளிப்பெல்லாம் வேண்டாம். பேசாம குழந்தைங்கட்ட சொன்னதுன்னு உண்மையச் சொல்லி தப்பிச்சுடுங்க;-)

    பதிலளிநீக்கு
  4. //ஆமா இத்தனை பதிவு போட்டு தள்ளுறீங்க.... உங்க மனைவி எப்போதும் நீங்க கம்ப்யூட்டர் கூடவே இருக்கீங்கன்னு சண்டைக்கு வர போறாங்க :-))) இப்ப இல்லைனாலும் விரைவில்//

    கிரி,

    நீங்களே ஒரு எட்டு வந்து வம்பு மூட்டிவிட்டுச் செல்லுங்களேன்.

    பதிலளிநீக்கு
  5. //வடுவூர் குமார் said...
    ஒரு “ம்” தான் விட்டுப்போச்சு அதற்கு இப்படியா? :-))
    அண்ணியெல்லாம் கவலைப்படமாட்டாங்க...கல்யாணமாகி 20 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.
    பார்ப்போம் யார் யார் வருகிறார்கள் என்று.

    9:02 PM, August 26, 2008
    //

    அதெல்லாம் ஒத்துக்கிற மாட்டோம், இன்னும் இளமை மாறாமல் தானே இருக்கிங்க, என்ன ரொமான்ஸ் எங்க நடக்குதோ, அண்ணி பாவம் !
    :)))))))

    பதிலளிநீக்கு
  6. //விஜய் ஆனந்த் said...
    ;-)))

    9:14 PM, August 26, 2008
    //.
    விஜய்,
    என்ன நீ ஒரே ஒரு சிரிப்பானை மட்டும் போட்டுட்டு பம்முறீர்....ஒழுங்காக தூங்கும் முன்பு ஒரு 10 பின்னூட்டம் வரனும் !

    பதிலளிநீக்கு
  7. //முகவை மைந்தன் said...
    கொஞ்சறதுக்கே நேரமாகுமாம்....கிகிகிகி!

    குமார், சமாளிப்பெல்லாம் வேண்டாம். பேசாம குழந்தைங்கட்ட சொன்னதுன்னு உண்மையச் சொல்லி தப்பிச்சுடுங்க;-)

    9:16 PM, August 26, 2008
    //

    ஆனால் இன்னொரு கண்டிசன், கொஞ்சும்
    குழந்தைக்கு எத்தனை வயசு என்றும் சொல்லிவிடனும் !

    பதிலளிநீக்கு
  8. வடுவூர் குமாரைக் கலாய்க்கும் கோவி.கண்ணனுக்கெதிராக நாடு தழுவிய உறக்கப் போராட்டம்.

    இன்றிரவு 11 மணிமுதல் காலை 6 மணிவரை!

    அனைவரும் வருக... அளவின்றி தூங்குக!

    பதிலளிநீக்கு
  9. வடுவூர் குமாரின் புகைக் குலைக்கச் சதி!

    சர்வதேச நாடுகளுடன் கூட்டு சேர்ந்து கோவியார் செய்த சதி அம்பலம்!

    பதிலளிநீக்கு
  10. //வடுவூர் குமாரின் புகைக் குலைக்கச் சதி!//

    ஐயையோ!

    அது புகை இல்லீங்க...

    புகழை'

    உணர்ச்சிவசப்பட்டதுல மாறிப்போச்சு!

    பதிலளிநீக்கு
  11. எல்லாம் சரிங்க... வடுவூர்குமார் வடுவூர்ல இருக்காரா.. சிங்கப்பூர்காரரா?

    பதிலளிநீக்கு
  12. கண்னஞி..

    நீங்க ஸ்பெஷல் பதிவு போட்டு கலய்ச்சவங்களெல்லாம் சங்கம் ஆரம்பிச்சு உங்களைக் கலாய்க்கப் போறதா உளவுத்துறைத் தகவல் வந்திருக்கு.. சாஆஆஆஆஆஆக்கிரத!

    பதிலளிநீக்கு
  13. இப்படியெல்லாம் செஞ்சீங்க..குமார் கிட்டே இருந்து அடுத்த பதிவு 'நான் விடைபெறுகிறேன்' என்பதாக இருக்கப் போகிறது.

    பதிலளிநீக்கு
  14. குமார் அண்ணாச்சிய கும்மாதவங்கள எல்லாம் அடுத்து பதிவு போட்டு கும்ம போறாராம் கோவி.க அண்ணா. எல்லாரும் ஓடி வாங்க.

    குமார் அண்ணாச்சி, என்ன இருந்தாலும் நீங்க இப்டி கோவி.க அண்ணணுக்கு தெரியுறமாதிரியா கொஞ்சுறது? இப்ப கண்ணண் அண்ணண் எப்படி சத்தமேயில்லாம யாருக்கும் தெரியாம கொஞ்சுறாருல, அவருகிட்ட கத்துக்குங்க.

    பதிலளிநீக்கு
  15. வடுவூர் குமார் இனி துபாய் சொத்து என்பதால் அவரை கொஞ்சமும் சேதாரம் இன்றி உள் குத்தாக குத்தி அனுப்பவும்!!!

    பதிலளிநீக்கு
  16. //'கொஞ்ச' நேரமாகுமாம்.//

    ”கொஞ்ச நேரமாகும்” என்றால் கொஞ்ச நேரமாகும் என்று அர்த்தமா? இல்லை கொஞ்சும் நேரம் அதிகம் என்று அர்த்தமா?

    பு.த.வி

    பதிலளிநீக்கு
  17. கிரி said...
    ஆமா இத்தனை பதிவு போட்டு தள்ளுறீங்க.... உங்க மனைவி எப்போதும் நீங்க கம்ப்யூட்டர் கூடவே இருக்கீங்கன்னு சண்டைக்கு வர போறாங்க :-))) இப்ப இல்லைனாலும் விரைவில்//

    என்னங்க இப்படி சொல்லிட்டீங்க? காலை ஆகாரத்துக்கு முன்பு ஒன்று, பின் ஆகாரத்துக்கு பின்பு ஒன்று,
    மதியம் சாப்பாடுக்கு முன்பு ஒன்று,
    மதியம் சாப்பிட்ட பின் ஒன்று
    இரவு சாப்பிடும் முன்பு ஒன்று
    இரவு சாப்பிட்ட பின்பு ஒன்று
    படுக்க போகும் முன்பு ஒன்று
    என்று ஒரு நாளைக்கு 10(?டோட்டல் அப்படிதான்) பதிவுதான் போடுறாரு இதுல போய் கண்ணு வைக்கிறீங்களே!!!

    பதிலளிநீக்கு
  18. ஆள் இல்லாத டீ கடையில் பொருப்பா டீ ஆத்தும் என்னை என்னான்னு சொல்வது:(((

    பதிலளிநீக்கு
  19. //குசும்பன் said...
    ஆள் இல்லாத டீ கடையில் பொருப்பா டீ ஆத்தும் என்னை என்னான்னு சொல்வது:(((

    10:33 PM, August 26, 2008
    //
    பொறு பொறு...தம்பி விஜய் ஆனந்த் வருவான்

    பதிலளிநீக்கு
  20. //குசும்பன் said...
    ஆரும் இருக்கீங்களா?

    10:24 PM, August 26, 2008
    //

    எல்லோருக்கும் இரவு சாப்பாட்டு டயம் !

    பதிலளிநீக்கு
  21. //குசும்பன் said...


    என்னங்க இப்படி சொல்லிட்டீங்க? காலை ஆகாரத்துக்கு முன்பு ஒன்று, பின் ஆகாரத்துக்கு பின்பு ஒன்று,
    மதியம் சாப்பாடுக்கு முன்பு ஒன்று,
    மதியம் சாப்பிட்ட பின் ஒன்று
    இரவு சாப்பிடும் முன்பு ஒன்று
    இரவு சாப்பிட்ட பின்பு ஒன்று
    படுக்க போகும் முன்பு ஒன்று
    என்று ஒரு நாளைக்கு 10(?டோட்டல் அப்படிதான்) பதிவுதான் போடுறாரு இதுல போய் கண்ணு வைக்கிறீங்களே!!!

    10:23 PM, August 26, 2008
    //


    தம்பி தேனிர் இடைவேளையை விட்டுவிட்டீர்கள் ! அப்பதான் பின்னூட்டமே !

    பதிலளிநீக்கு
  22. பரிசல்காரன் said...
    இன்றிரவு 11 மணிமுதல் காலை 6 மணிவரை!

    அனைவரும் வருக... அளவின்றி தூங்குக!//

    தனியாகவா? :((((

    பதிலளிநீக்கு
  23. //குசும்பன் said...
    //'கொஞ்ச' நேரமாகுமாம்.//

    ”கொஞ்ச நேரமாகும்” என்றால் கொஞ்ச நேரமாகும் என்று அர்த்தமா? இல்லை கொஞ்சும் நேரம் அதிகம் என்று அர்த்தமா?

    பு.த.வி
    //

    உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு....இதுக்கெல்லாம் பொருள் கேட்டால், நீ என்ன பிவாசு படத்தில் நடித்த சின்ன தம்பியா ?

    பதிலளிநீக்கு
  24. //பரிசல்காரன் said...
    எல்லாம் சரிங்க... வடுவூர்குமார் வடுவூர்ல இருக்காரா.. சிங்கப்பூர்காரரா?

    10:11 PM, August 26, 2008
    //


    அவர் ஒரு பரந்தாமன் ! தூணிலும் இருப்பார் துபாயிலும் இருப்பார், சிங்கையிலும் இருப்பார் சென்னையிலும் இருப்பார். தற்போதைக்கு சிங்கையில் இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  25. //பரிசல்காரன் said...
    கண்னஞி..

    நீங்க ஸ்பெஷல் பதிவு போட்டு கலய்ச்சவங்களெல்லாம் சங்கம் ஆரம்பிச்சு உங்களைக் கலாய்க்கப் போறதா உளவுத்துறைத் தகவல் வந்திருக்கு.. சாஆஆஆஆஆஆக்கிரத!

    10:13 PM, August 26, 2008
    //

    பரிசல்,
    சங்கத்துக்கு தலைவராக இருப்பவர் திருப்பூர் காரராமே எனக்கும் தகவல் வந்தது.

    பதிலளிநீக்கு
  26. //kanchana Radhakrishnan said...
    இப்படியெல்லாம் செஞ்சீங்க..குமார் கிட்டே இருந்து அடுத்த பதிவு 'நான் விடைபெறுகிறேன்' என்பதாக இருக்கப் போகிறது.

    10:13 PM, August 26, 2008
    //

    இராத கிருஷ்ணன் ஐயா,
    சிங்கையை விட்டு விடைபெறுகிறேன் என்று போட்டாலும் போடுவார். அதற்குத்தான் காத்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  27. கோவி.கண்ணன் said...
    உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு....இதுக்கெல்லாம் பொருள் கேட்டால், நீ என்ன பிவாசு படத்தில் நடித்த சின்ன தம்பியா ?//

    நினைவு படுத்தியமைக்கு நன்றி:)))

    பதிலளிநீக்கு
  28. அட! நமக்கு இவ்வளவு ஆதரவா?
    ஆச்சரியமாக இருக்கு.
    பரிசல்காரன் (ஒருமையில் இல்லையே??)
    ஜோசப்பாலராஜ் & குசும்பனுக்கு நன்றி.
    குசும்பன் - அதுக்குள்ள என்னை துபாய்காரர் ஆக்கிட்டீங்க.அங்க வந்த பிறகு நான் பார்த்துக்கொள்கிறேன்(கோவியார் மாதிரி) என்கிறீர்களா? :-))
    குழந்தை வயசை சொல்லனுமா? வீடியோவை கொடுக்கலாம் என்று பார்த்தால் சுட்டி எங்கோயோ கிடக்கு.நாளை காலை கொடுக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  29. //குசும்பன் said...
    வடுவூர் குமார் இனி துபாய் சொத்து என்பதால் அவரை கொஞ்சமும் சேதாரம் இன்றி உள் குத்தாக குத்தி அனுப்பவும்!!!

    10:17 PM, August 26, 2008
    //

    ஹலோ ! அவர் துபாய் வந்த பிறகு தான் உங்க சொத்து, இப்ப இங்க இருக்காருல்ல.

    பதிலளிநீக்கு
  30. //வடுவூர் குமார் said...
    அட! நமக்கு இவ்வளவு ஆதரவா?
    ஆச்சரியமாக இருக்கு.
    பரிசல்காரன் (ஒருமையில் இல்லையே??)
    //
    குமார்,

    பரிசல்'காரன்' ஒருமை அல்ல, அது அவரே நமக்கு கொடுக்கும் உரிமை ! தாராளமாக சொல்லுங்கள் !

    பதிலளிநீக்கு
  31. //ஜோசப் பால்ராஜ் said...
    குமார் அண்ணாச்சிய கும்மாதவங்கள எல்லாம் அடுத்து பதிவு போட்டு கும்ம போறாராம் கோவி.க அண்ணா. எல்லாரும் ஓடி வாங்க.//

    அடுத்து கும்மப்படுபவர் பெயர் குலுக்கல் முறையில் தேந்தெடுக்கப்படும் !

    //குமார் அண்ணாச்சி, என்ன இருந்தாலும் நீங்க இப்டி கோவி.க அண்ணணுக்கு தெரியுறமாதிரியா கொஞ்சுறது? இப்ப கண்ணண் அண்ணண் எப்படி சத்தமேயில்லாம யாருக்கும் தெரியாம கொஞ்சுறாருல, அவருகிட்ட கத்துக்குங்க.
    //

    பால்ராஜ்,

    நீங்கச் சொல்வதைக் படிக்கும் போது கன்னிராசி ஜனகராஜ் சொல்லும் 'கொஞ்சாதிங்க....கொஞ்சாதிங்க' தான் ஞாபகம் வருது !

    பதிலளிநீக்கு
  32. //குசும்பன் said...
    ஹலோ ! அவர் துபாய் வந்த பிறகு தான் உங்க சொத்து, இப்ப இங்க இருக்காருல்ல.//

    ”இவர் உங்கள் சொத்து” என்று அவர் முதுகில் இருக்கு வாசகத்தை படிங்க ஒருமுறை!!!

    பதிலளிநீக்கு
  33. //குசும்பன் - அதுக்குள்ள என்னை துபாய்காரர் ஆக்கிட்டீங்க.அங்க வந்த பிறகு நான் பார்த்துக்கொள்கிறேன்(கோவியார் மாதிரி) என்கிறீர்களா? :-))//

    எப்ப விசா ஸ்டாம்பிங்குக்கு கொடுத்தீங்களோ அப்பயே துபாய் ஆள் ஆகிட்டீங்க, உங்களுக்கு துணையாக இரண்டு அரபி பெண்களும் ரெடியாக இருக்கிறார்கள்!!!
    வரும் பொழுது அரபி டிரஸில் தலையில் தயிர் பானைக்கு உறி கட்டியது போல் ஒரு கயிறை கட்டி வரவும்:)))

    பதிலளிநீக்கு
  34. எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாரு !

    //

    அம்புட்டு நல்லவரா குமார் அண்ணே
    :))))

    பதிலளிநீக்கு
  35. ஒருத்தரை கலாய்க்கிறதுன்னா போதுமே 'கொஞ்ச' நேரத்துக்குள்ள வந்து கும்மிருவீங்களே, நீங்க அழுவாதீங்க குமார்.!

    பதிலளிநீக்கு
  36. அய்யோ...லேட்டாயிடுச்சே....
    வட போச்சே!!!

    நா ரெடி..நா ரெடி..நா ரெடி!!!

    யாரும் இருக்கீங்களா???

    பதிலளிநீக்கு
  37. //குசும்பன் said...
    கிரி said...
    ஆமா இத்தனை பதிவு போட்டு தள்ளுறீங்க.... உங்க மனைவி எப்போதும் நீங்க கம்ப்யூட்டர் கூடவே இருக்கீங்கன்னு சண்டைக்கு வர போறாங்க :-))) இப்ப இல்லைனாலும் விரைவில்//

    என்னங்க இப்படி சொல்லிட்டீங்க? காலை ஆகாரத்துக்கு முன்பு ஒன்று, பின் ஆகாரத்துக்கு பின்பு ஒன்று,
    மதியம் சாப்பாடுக்கு முன்பு ஒன்று,
    மதியம் சாப்பிட்ட பின் ஒன்று
    இரவு சாப்பிடும் முன்பு ஒன்று
    இரவு சாப்பிட்ட பின்பு ஒன்று
    படுக்க போகும் முன்பு ஒன்று
    என்று ஒரு நாளைக்கு 10(?டோட்டல் அப்படிதான்) பதிவுதான் போடுறாரு இதுல போய் கண்ணு வைக்கிறீங்களே!!!//

    குசும்பன் நீங்க சொன்னத கேட்டே எனக்கு கண்ணு கட்டுது..இதுல நம்ம கோவி கண்ணன் எப்படி இத்தனை பதிவு போடுறாரு ...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    பதிலளிநீக்கு
  38. //ஆமா இத்தனை பதிவு போட்டு தள்ளுறீங்க.... உங்க மனைவி எப்போதும் நீங்க கம்ப்யூட்டர் கூடவே இருக்கீங்கன்னு சண்டைக்கு வர போறாங்க :-))) இப்ப இல்லைனாலும் விரைவில்//

    உங்களுக்கு வரும் பின்னூட்டதில் 30% இந்தமாதிரி இருந்தால், அபாயம்.

    அப்புறம் உங்களுக்கும் பகிரங்கமாகக் கடிதமெழுத வேண்டும். தயாரா?

    பதிலளிநீக்கு
  39. \\பரிசல்காரன் said...
    வடுவூர் குமாரைக் கலாய்க்கும் கோவி.கண்ணனுக்கெதிராக நாடு தழுவிய உறக்கப் போராட்டம்.

    இன்றிரவு 11 மணிமுதல் காலை 6 மணிவரை!

    அனைவரும் வருக... அளவின்றி தூங்குக!//

    இப்போரட்டத்திற்கு எனது ஆதரவினை தெரிவித்துக்கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  40. வடுவூர் குமார் அவர்கள் ஒரு எழுத்தை மறந்து விட்டதுக்கு, மறக்காமல் ஒரு பதிவு போட்டு அவரைக் கலாய்க்க வலை உலகைத் தூண்டும் கோவியாரே!
    எங்கு, எப்ப பிடித்தீர்கள் அந்த ஸ்கிரீன் ஷாட்டை?

    இப்ப ஒரு பொன்மொழி ஞாபகம் வருது!!!

    "Man is not happy. He does not make others also happy"


    வடுவூர் குமார் எங்கள் பக்கத்து ஊர்க்காரர். தெரிந்து கொள்ளுங்கள்.
    தான் கற்ற தொழில் நுட்பம் மற்றும் இதர விடயங்களை வலை உலகுடன் பகிர்ந்து கொள்ளும் நல்ல மனத்துக்குச் சொந்தக்காரர்.

    பதிலளிநீக்கு
  41. குமார், இந்தக் கிருஷ்ண ஆட்டத்துக்கெல்லாம் நான் நம்ப மாட்டேன்.

    எப்ப துபாய் வருவீங்க.மெயிலவும்.

    பதிலளிநீக்கு
  42. வடுவூர்காரரு உங்க்ளுக்கே அண்ணனா?

    அப்ப அவருக்கு ஒரு 70 வயசு இருக்குமா?

    என் சமீபத்திய 55+ பதிவை நீங்களும், அவரும் வாசிக்கவும் ;)

    பதிலளிநீக்கு
  43. //
    பரிசல்'காரன்' ஒருமை அல்ல, அது அவரே நமக்கு கொடுக்கும் உரிமை ! தாராளமாக சொல்லுங்கள் !//

    ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்

    பதிலளிநீக்கு
  44. //SurveySan said...
    வடுவூர்காரரு உங்க்ளுக்கே அண்ணனா?

    அப்ப அவருக்கு ஒரு 70 வயசு இருக்குமா?

    என் சமீபத்திய 55+ பதிவை நீங்களும், அவரும் வாசிக்கவும் ;)
    //

    என்னைவிட 1 நாள் முன்பே பிறந்திருந்தாலும் அண்ணன் என்று தானே சொல்ல முடியும். வடுவூர் குமார் அண்ணன் எங்க ஊரில் படித்தவர்.


    சிலர் இரட்டை பிறவிகளில் கூட 10 நிமிசத்துக்கு முன்பே பிறந்தவனை அண்ணன் என்பார்கள். ஆனால் முதலில் பிறக்கும் குழந்தை கருவில் இரண்டாவதாக உருவானதாம் !

    உங்க 55+ பதிவு எங்கள் இருவருக்குமே சூட் ஆகாது ! :)

    பதிலளிநீக்கு
  45. //இக்பால் said...
    \\பரிசல்காரன் said...
    வடுவூர் குமாரைக் கலாய்க்கும் கோவி.கண்ணனுக்கெதிராக நாடு தழுவிய உறக்கப் போராட்டம்.

    இன்றிரவு 11 மணிமுதல் காலை 6 மணிவரை!

    அனைவரும் வருக... அளவின்றி தூங்குக!//

    இப்போரட்டத்திற்கு எனது ஆதரவினை தெரிவித்துக்கொள்கிறேன்

    7:58 AM, August 27, 2008
    //

    இக்பால்,

    நீங்கள் அடுத்தமுரை பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை என்றால் மபெரும் போராட்டமே நடக்கும்

    பதிலளிநீக்கு
  46. //வல்லிசிம்ஹன் said...
    குமார், இந்தக் கிருஷ்ண ஆட்டத்துக்கெல்லாம் நான் நம்ப மாட்டேன்.

    எப்ப துபாய் வருவீங்க.மெயிலவும்.

    9:07 AM, August 27, 2008
    //

    வல்லி அம்மா,

    அவருக்கு கிருஷ்ணன் பெயர்தான் ! மன்னார் அண்ட் கம்பெணி அப்பாய்ண்மெண்டுக்காக காத்திருக்கிறார். விரைவில் வருவார் !

    :)

    பதிலளிநீக்கு
  47. //ஜோதிபாரதி said...
    வடுவூர் குமார் அவர்கள் ஒரு எழுத்தை மறந்து விட்டதுக்கு, மறக்காமல் ஒரு பதிவு போட்டு அவரைக் கலாய்க்க வலை உலகைத் தூண்டும் கோவியாரே!
    எங்கு, எப்ப பிடித்தீர்கள் அந்த ஸ்கிரீன் ஷாட்டை?
    //
    ஜோதி,

    அதெல்லாம் ஒப்புக் கொள்ளமாட்டேன், ஒரு எழுத்தில் நீதிபதியின் தீர்பே மாறிடும் ! அது ஸ்கிரின் ஷாட் தான் பெயிண்டில் எடிட் செய்தேன்.

    //இப்ப ஒரு பொன்மொழி ஞாபகம் வருது!!!

    "Man is not happy. He does not make others also happy"

    வடுவூர் குமார் எங்கள் பக்கத்து ஊர்க்காரர். தெரிந்து கொள்ளுங்கள்.
    தான் கற்ற தொழில் நுட்பம் மற்றும் இதர விடயங்களை வலை உலகுடன் பகிர்ந்து கொள்ளும் நல்ல மனத்துக்குச் சொந்தக்காரர்.

    8:40 AM, August 27, 2008
    //

    இப்ப அதெல்லாம் யாரு இல்லைன்னு சொன்னது ?

    பதிலளிநீக்கு
  48. //கிரி said...


    குசும்பன் நீங்க சொன்னத கேட்டே எனக்கு கண்ணு கட்டுது..இதுல நம்ம கோவி கண்ணன் எப்படி இத்தனை பதிவு போடுறாரு ...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    12:39 AM, August 27, 2008
    //

    ம்ஹூம் பகுத்தறிவை எடுத்துவச்சிட்டு சுத்திப் போட்டுக்க வேண்டியது தான் !
    :)

    பதிலளிநீக்கு
  49. //வடுவூர் குமார் said...
    நான் கொஞ்சும் குழந்தையை இங்கு பார்க்கலாம்.

    7:08 AM, August 27, 2008
    //

    குமார் அண்ணன்,
    நீங்க படிக்கும் போது எடுத்த வீடியோ தானே, அந்த காலத்து படமாக இருந்தாலும் பளிச் சென்று இருக்கிறது !

    :))))))))))))

    பதிலளிநீக்கு
  50. //குசும்பன் said...
    //குசும்பன் - அதுக்குள்ள என்னை துபாய்காரர் ஆக்கிட்டீங்க.அங்க வந்த பிறகு நான் பார்த்துக்கொள்கிறேன்(கோவியார் மாதிரி) என்கிறீர்களா? :-))//

    எப்ப விசா ஸ்டாம்பிங்குக்கு கொடுத்தீங்களோ அப்பயே துபாய் ஆள் ஆகிட்டீங்க, உங்களுக்கு துணையாக இரண்டு அரபி பெண்களும் ரெடியாக இருக்கிறார்கள்!!!
    வரும் பொழுது அரபி டிரஸில் தலையில் தயிர் பானைக்கு உறி கட்டியது போல் ஒரு கயிறை கட்டி வரவும்:)))

    11:13 PM, August 26, 2008
    //

    குசும்பன், நீ
    எதோ திட்டத்தோடு இருப்பது போல் தெரிகிறது ! குமார் அண்ணா எச்சரிக்கையாக இருங்க.

    பதிலளிநீக்கு
  51. பரிசல்காரன், சுவனப்பிரியன், விஜய் ஆனந்த் மற்றும் தாமிரா மிக்க நன்றி !

    பதிலளிநீக்கு
  52. //கல்யாணமாகி 20 வருடங்களுக்கு மேலாகிவிட்டது//

    உங்களைப் பாத்தா, அப்படித் தெரியலையே !!

    பதிலளிநீக்கு
  53. //வடுவூர் குமார் said...

    நான் கொஞ்சும் குழந்தையை இங்கு பார்க்கலாம்.//

    அண்ணாச்சி நீங்க கொஞ்சும் கொயந்த கொஞ்சம் பெரியவரா இருக்கார். ஆமாம் அவரு என்னா மேஜிக் செய்ய போகிறார்? பேனாவை வைத்து ஏது எதுவோ செய்கிறார், ஒன்னும் விளங்கமாட்டேங்குது.

    (இருந்தாலும் அவர் பேசும் பொழுது கண்களும் நாட்டியம் ஆடுகின்றன)
    அடுத்த முறை உண்மைதமிழன் எடுக்க போகும் குறும் படத்தில் கண்ணை மட்டும் காட்ட போகிறாராம் அப்பொழுது அதில் இவரை நடிக்கவைக்கலாம்.

    பதிலளிநீக்கு
  54. எனக்கென்னவோ அது “கொஞ்சம் நேரம் ஆகும்” எனபது போல் தோன்றுகிறது...

    பதிலளிநீக்கு
  55. வந்து கலாய்த அனைவருக்கும் நன்றி.
    வல்லியம்மா மற்றும் அனைவருக்கும், துபாய் வரும் முன் தெரியப்படுத்துகிறேன்.
    குசும்பனின் லேட்டஸ்ட் கமெண்ட் சூப்பர்.
    கோவியாரே அது பழைய வீடியோவா?? :-)))

    பதிலளிநீக்கு
  56. மனைவி இந்த கலாய்தலை மிகவும் விரும்பிப் படித்தார். அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !