17 ஜனவரி, 2008

தமிழ்நாட்டில் 'சோ' மட்டும் தான் அறிவாளி !

பாஜக-அதிமுக-தேமுதிக கூட்டு சேர்ந்தால் '40க்கு 40' கிட்டைக்குமாம். சொன்னவர் மூத்த பத்திரிக்கையாளர் சோ.

பாஜக தமிழகத்தில் ஒரு 0, சட்டமன்ற தேர்தலில் ஒரு இடம் பெற்ற தேமுதிக பார்லிமெண்ட் தேர்தலைப் பொருத்து மற்றொரு 0, அதிமுகவுக்கு 4 எம்பி சீட் கிடைக்கும் என்று வைத்துக் கொண்டாலும், சோ கணக்கு பட்டி 4 + 0 + 0 = 400 சீட் கொழிக்கனுமே. கணக்கை தவறாக சொல்கிறாரோ ? :)

குரங்கு அப்பம் பிடும் கதை மாதிரி இருக்கிறதா, இதெல்லாம் சாணக்கியத்தனம். செல்வாக்கு இல்லாத பாஜக மற்றும் பார்லிமெண்ட் தேர்தலை சந்திக்காத தேமுதிகவுக்கு ஜெவின் செல்வாக்கை பிரித்து கொடுக்கும் முயற்சியாக சொல்கிறார். அறிவாளி தானே ?

சென்னை: பாஜகவுடன் அதிமுக-தேமுதிக கூட்டணி அமைத்தால் வெற்றி நிச்சயம் என துக்ளக் இதழின் ஆசிரியரும் ஆர்எஸ்எஸ் ஆதரவாளருமான சோ கூறியுள்ளார்.

துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் சோ பேசுகையில்,

தமிழக அரசுக்கு பாமக அளிக்கும் நெருக்கடி அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் நிதி நிர்வாகம் படுமோசமடைந்துள்ளது. திமுகவில் யாருக்கு எந்த பதவி கொடுப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கனிமொழிக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்குமா என்பது தெரியவில்லை. பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் கூட இது தெரியாது.


லக்கி லுக் ஐயா, திமுக அரசு இவ்வளவு சிரமப்படுகிறது என்று இந்த அளவுக்கு கவலைப்பட்டு இருக்கிறீரா ?

தமிழ்நாட்டில் பாஜக-அதிமுக இடையே கூட்டணி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்த இரண்டு கட்சிகளுடன் தேமுதிகவும் சேர்ந்தால் அந்த அணிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி உறுதி. 40 இடங்களும் கிடைக்கும்.

ஆனால் இதற்கு ஜெயலலிதா முன்வருவாரா என்று தெரியாது. விஜயகாந்த் தனித்து போட்டியிட்டால் அவரது கட்சி திமுக, அதிமுக ஓட்டுகளை பிரித்து 3வது இடத்துக்கு மட்டுமே வர முடியும்.


போயாஸ் தோட்டத்து கதவு திறந்தபிறகு தான் பாஜக மூச்சுவிட முயற்சிக்கிறது என்பதை எவ்வளவு நாசுக்காக சொல்கிறார். 'சோ' அறிவாளி தானே ? இந்த இரண்டு கட்சிகளுடன் தேமுதிகவும் சேர்ந்தால் அந்த அணிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி உறுதி. 40 இடங்களும் கிடைக்கும். 4+0+0 = 40 ? :), தமிழகம் என்ன பாண்டியில் கூட கூட்டணி வைக்கலாம்.

இந்தியாவில் இருப்பது போல கூட்டாட்சி முறையை ஏற்றுக் கொள்வதன் மூலம் தான் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். ராஜீவ்காந்தி கையெழுத்திட்ட ஒப்பந்தத்துக்கு மீண்டும் உயிரூட்டினால் தீர்வு ஏற்படும்.

நார்வே தூதுக்குழுவால் சாதிக்க முடியாத ஒன்றை, நாலே வரியில் சாதிக்க தீர்வு கூறும் 'சோ' அறிவாளி என்றால் நம்பித்தான் ஆகனும்.

பாரத ரத்னா விருது பெற வாஜ்பாய் தகுதியானவர்தான். ஆனால் அதை அத்வானி பிரதமரிடம் மட்டும் கூறி இருக்க வேண்டும். இப்படி வெளிப்படையாக சொல்லியிருக்க வேண்டியதில்லை.


பாஜக தன்னிடம் இது குறித்து ஆலோசிக்க வில்லை என்ற வருத்தத்தைக் கூட 'ஏன் இவ்வாறு செய்யவில்லை ?' என ஆழ்ந்து யோசிக்கும் படி சொல்லி இருக்கிறார் சோ என்கிற சொக்க தங்கம்.

பிரதீபா பட்டீலை விட அப்துல்கலாம் கையால் விருது வாங்கியிருந்தால் அது கெளரவமாக இருந்திருக்கும்.

போயும் போயும் காங்கிரஸ் தேர்ந்தெடுத்த ஒரு பொம்பள கையாள முன்னால் பிரதமர் விருதுவாங்குவதா ?அப்துல் கலாம் என்றால் பேச்சிலருக்கு பேச்சிலர் பார்டி கொடுத்த கெளரவாமாக மாதிரி இருந்திருக்கும். ச்சே ச்சே இந்த பழம் புளிக்கும் என்பதைக் கூட பெரும்தன்மையோட கெளரவத்துடன் தொடர்பு படுத்தி சொல்ல ஒரு பயலுக்கும் திறமை இருக்கிறதா ? 'சோ' என்றால் சோ தான்

கடந்த அக்டோபர் மாதமே துக்ளக் ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அழைத்திருந்தேன். குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுக்கும் இந்த விழாவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

இப்பொழுதாவது புரிந்து கொள்ளுங்கள் மோடிதான் முதல்வர் என்பது எனக்கு முன்னமே தெரியும் என்பதை அடக்கத்துடன் சொல்லிக் கொள்கிறேன். சோ தீர்க்கதரிசி என்று காட்டுவதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்கிறதா ?

காமராஜர் அரங்கில் விழா நடத்த பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதன் மூலம் விழாவுக்கு இலவசமாக விளம்பரம் தேடித்தந்த பல்வேறு அமைப்புகள், கட்சிகளுக்கு நன்றி.

துக்ளக் மூலம் நான் கூட கருணாநிதிக்கு விளம்பரம் தான் செய்கிறேன். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். இவ்வளவு கூலாக தனது நிலையை மறைமுகமாக சொல்லும் ஜீனியஸ் இருக்கிறார்களா ?

சோ - ஒன்லி ஒன் அறிவாளி இன் டமில் நாட் !

22 கருத்துகள்:

  1. இந்தப் பதிவின் மூலமும், துக்ளக்கிற்கு விளம்பரம் செய்ததற்கு நன்றி என்று சொல்லி அவருடைய அடிப்பொடி ஏதாச்சும் வரும்...

    பதிலளிநீக்கு
  2. //
    TBCD said...
    இந்தப் பதிவின் மூலமும், துக்ளக்கிற்கு விளம்பரம் செய்ததற்கு நன்றி என்று சொல்லி அவருடைய அடிப்பொடி ஏதாச்சும் வரும்...
    //

    டிபிசிடி ஐயா,
    துக்ளக்கிற்கு ஏற்கனவே உள் அட்டைகளில் 'வாலிப வாயோதிக அன்பர்களுக்கு...' சித்தவைத்தியர்கள் தரும் விளம்பரம் போதும்' என்பது அவர்களுக்கு தெரியாதா ?
    :)

    பதிலளிநீக்கு
  3. இல்லீங்கய்யா.கோவி.மு.கண்ணன் அய்யா மட்டும் தான் ஒரே அறிவாளி.பிரமிக்க வைக்கும் IQ அவருக்கு,(மைனஸ் 10).டிபிஸிடி அய்யாவுக்கு IQ மைனஸ் 12.அதனால அவர் இரண்டாவது அறிவாளி தான்.

    பாலா

    பதிலளிநீக்கு
  4. //bala said...
    இல்லீங்கய்யா.கோவி.மு.கண்ணன் அய்யா மட்டும் தான் ஒரே அறிவாளி.பிரமிக்க வைக்கும் IQ அவருக்கு,(மைனஸ் 10).டிபிஸிடி அய்யாவுக்கு IQ மைனஸ் 12.அதனால அவர் இரண்டாவது அறிவாளி தான்.

    பாலா
    //

    பாலா ஐயா,

    போஜனத்துல உப்பு போட்டு சாப்பிடுங்கோ. டாக்டர் உப்பு சேர்த்துக்கப்படாதுன்னு சொல்லிட்டாரா ? ஐயோ பாவம் !

    பதிலளிநீக்கு
  5. கோவி அவர்களே,

    பூனூல் போட்ட பாப்பானுக்கு நல்லா தெரியும் யார் வந்து யார்கூட சேரனும்னு. ஜெயலலிதாகூட ரஜினியை கூட விட்டதிலும் சோவுக்கு பெரும்பங்கு உண்டு. அதேபோல இப்போது நரேந்திர மோடியை கூட்டி வந்து ஜெயலலிதாவிடம் விட்டதிலும் சோவுக்கு பெரும்பங்கு உண்டு.

    அவர் அன்றைய காலம் தொட்டு இன்றைய காலம்வரைக்கும் கூட்டி வந்து விடும் மாமா வேலைதான் பார்க்கிறார்!

    அதனால்தான் பூனூல் போட்ட பார்ப்புகள் அவரை பெரிய அறிவாளியாக புகழ்கின்றன!!!

    பாப்பான் பொழைப்பே கூட்டிக் கொடுப்பது தானே!!!

    பதிலளிநீக்கு
  6. //விடாதுகருப்பு said...

    //பாப்பான் பொழைப்பே கூட்டிக் கொடுப்பது தானே!!!
    //

    இப்படி பொதுப்படையாக சொல்வதை தவிர்க்கவும். ஏற்புடையது அல்ல.

    பதிலளிநீக்கு
  7. தமிழ்நாட்டில் "மாமா சோ" என்ற குமுட்ட தான் ஒரே அறிவாளி என்பதை வழிமொழிக்கிறேன்

    பதிலளிநீக்கு
  8. ஐயா... அவர்களுக்கு பொழைப்புக்கு துலுக்கன் வேணும்.
    இல்லைன்னா செத்து போய்ருவானுங்க.
    இப்ப கூட பாருங்க, அவனுங்க பத்திரிகைக்கு ஒரு துலுக்கன் பேரை தான் வச்சிருக்கான்.
    அதுல துலுக்கனை, வஞ்சிக்கப்பட்ட மக்களை தாக்கி எழுதி, கோயில், குளதில, கை ஏந்தி பிச்சை எடுத்து ஜீவனம் பண்ணுகிற பார்ப்பான் வீட்டு காசை மொட்டை போடுது இந்த மொட்டை போட்ட
    அறிவாளி.
    ஓ.... மறந்து போச்சு.... இது கூட அறிவாளி "சோ" துலுக்கனுக்கு செய்யிற விளம்பர மோ.....

    பதிலளிநீக்கு
  9. //டிபிசிடி ஐயா,
    துக்ளக்கிற்கு ஏற்கனவே உள் அட்டைகளில் 'வாலிப வாயோதிக அன்பர்களுக்கு...' சித்தவைத்தியர்கள் தரும் விளம்பரம் போதும்' என்பது அவர்களுக்கு தெரியாதா ?
    :)
    //
    துக்ளக்கில் பல விளம்பரங்கள் வருகின்றன. தங்களுக்கு உபயோகம் உள்ள விளம்பரத்தை மட்டும் தான் பார்ப்பீர்களோ??

    பதிலளிநீக்கு
  10. //nandan said...
    துக்ளக்கில் பல விளம்பரங்கள் வருகின்றன. தங்களுக்கு உபயோகம் உள்ள விளம்பரத்தை மட்டும் தான் பார்ப்பீர்களோ??
    //

    நந்தன் ஐயா,

    ஆமாம் யாருக்காவது பயன்படும் என்று பார்பது உண்டு. உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு கூட சிபாரிசு செய்யுங்கள்

    பதிலளிநீக்கு
  11. பார்ப்பானீயத்தின் அழிவிற்கு வித்திட்டு
    வரும் சோமாரி!
    கொஞ்ச நஞ்சம் மானம்,மரியாதை
    உள்ள தமிழர்கள் நரித்தனத்தைப்
    புரிந்து கொள்வார்கள்.
    சோமாரி குஜ்ராத் போகப் போகிறாராம்,
    பி.ஜே.பி. ஆட்சியிலே ஆளுனராக!
    கருமம் ஒழிந்தால் சரி.

    பதிலளிநீக்கு
  12. பதிவின் இழையோடும் நகைச்சுவை மற்றும் வஞ்சப்புகழ்ச்சி அருமை.

    சோ சாணக்கியன் மற்றும் ராஜாஜி என்கிற காலியான குடில்களில் மடத்தை ஆரம்பிக்க நினைக்கிறார். பாவம் சாணக்கியனின் அறிவாற்றலும் ராஜாஜியின் முன்னோக்கும் 'சோனா' ராமசாமிக்கு சுட்டு போட்டாலும் வராது. சாணக்கியன் ராஜாஜியின் அறிவாற்றலில் உள்ள பார்ப்பன சார்பு அல்லது பிராமண சார்பு அரசியல் விவாதிக்கப்பட வேண்டிய மற்றொரு விஷயம். என்றாலும் பார்ப்பன வரலாற்றில் அவர்களுக்கு ஒரு இடம் உண்டு. சோனா ரானாவுக்கு போயஸ்கார்டன் மடம்தான் உண்டு.

    விடாது கருப்பு கூறியதுபோல் கூட்டிவந்து கூட்டணி கும்மி அடிப்பதையே தனது அரசியல் பணியாக கடமையாக செய்து வருகிறார். வயதான காலத்தில் அவரால் முடிந்தது.

    அடுத்த ஆட்டத்தில் புன கன வின கன (புரட்டுக் கலைஞர் வி.க.) வை சேர்ப்பது சோவின் 'ராஜதந்திரம்'. இரண்டு விஷயங்கள அவர் சாதிக்க நினைக்கிறார். 1. விசய காந்தை வளரவிட்டு தமிழ் தேசிய கட்சிகளை குழப்பவது. (எம்ஜியாரை வளர்த்தது போல.) 2. அ.தி.மு.க. வழியாக இடத்தை பா.ஜ.கா. மறு உறுதி செய்வது.

    போனமுறை வி.கா. ற்கு ஒரு தொகுதி கிடைத்தது கூட ப.ம.கா.வின் கடைசி நிமிட தாக்குதலால்தான். தாக்கப்பட்ட வி.கா.-வப் பார்த்து மூக்கை சிந்திக்காண்டே முத்திரைக் குத்திய விருத்தாசல வாக்காளர்கள் தந்த வெற்றி. மாயமானை நம்பி மறுபடியும் ஏமாறும் ராமனாகிவிடக்கூடாது என்பதால் கூட்டணியை உறதிப்படுத்தும் 45 வகை சாப்பாட்டுடன் ஆன விருந்து. செந்தழல் ரவி கூறியதுபோல உன்டது செறிக்க கடைசியில் மோடிக்கு ஒரு டம்ளர் சிறுபான்மை மக்களின் இரத்தத்தை தந்தார் ஜெயலலிதா என்பது பல அர்த்தங்களைக் கொண்ட ஒரு வாக்கியம்தான்.

    அன்புடன்
    ஜமாலன்.

    பதிலளிநீக்கு
  13. பேடி'யின் 46வது ஐயிட்டம்....

    http://aatrangaraininaivugal.blogspot.com/2008/01/46.html

    பதிலளிநீக்கு
  14. //இந்த இரண்டு கட்சிகளுடன் தேமுதிகவும் சேர்ந்தால் அந்த அணிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி உறுதி. 40 இடங்களும் கிடைக்கும்.

    ஆனால் இதற்கு ஜெயலலிதா முன்வருவாரா என்று தெரியாது. //

    idharku VK munn varuvaaraa?

    i think vijayakanth is not that much of a fool.

    பதிலளிநீக்கு
  15. யாராவது அண்ணே வேலைபார்க்கிற இடத்துல தட்ஸ் தமிழ் ஐ black பண்ணுங்களே....

    பதிலளிநீக்கு
  16. கலக்கிட்டீங்க.....

    இந்த சோ கோமாளிய பத்தி நான் பதிவு போடலாம்னு இருந்தேன்..முந்திக்கிட்டீங்க.

    உங்களுக்கு ஏதாவது கெடுதல் நடக்கனும்னு எந்த உஞ்சவிருத்தியாவது ஏதாவது யாகம்/பூஜை பன்னிடப்போவது...நீங்களும் கொஞ்சம் சாக்கிறதையா இருங்க.

    பதிலளிநீக்கு
  17. //Sathiyanarayanan said...
    தமிழ்நாட்டில் "மாமா சோ" என்ற குமுட்ட தான் ஒரே அறிவாளி என்பதை வழிமொழிக்கிறேன்
    //

    நன்றி ! அகில உலகத்துக்கும் 'சோ' மட்டுமே அறிவாளியாக தெரியவைக்க வேண்டும் !

    பதிலளிநீக்கு
  18. //கோலி சோடா கோயிந்தன் said...
    ஐயா... அவர்களுக்கு பொழைப்புக்கு துலுக்கன் வேணும்.
    இல்லைன்னா செத்து போய்ருவானுங்க.
    இப்ப கூட பாருங்க, அவனுங்க பத்திரிகைக்கு ஒரு துலுக்கன் பேரை தான் வச்சிருக்கான்.
    அதுல துலுக்கனை, வஞ்சிக்கப்பட்ட மக்களை தாக்கி எழுதி, கோயில், குளதில, கை ஏந்தி பிச்சை எடுத்து ஜீவனம் பண்ணுகிற பார்ப்பான் வீட்டு காசை மொட்டை போடுது இந்த மொட்டை போட்ட
    அறிவாளி.
    ஓ.... மறந்து போச்சு.... இது கூட அறிவாளி "சோ" துலுக்கனுக்கு செய்யிற விளம்பர மோ.....
    //

    என்ன சொல்றிங்க பாப்பான் வீட்டு காசை மொட்டை போட்ட அறிவாளி ?

    அதெல்லாம் பைசா பெயராது. பலத்தை நிரூபிக்க பக்க பலமாக வந்திருப்பாங்க

    பதிலளிநீக்கு
  19. //Thamizhan said...
    பார்ப்பானீயத்தின் அழிவிற்கு வித்திட்டு
    வரும் சோமாரி!
    கொஞ்ச நஞ்சம் மானம்,மரியாதை
    உள்ள தமிழர்கள் நரித்தனத்தைப்
    புரிந்து கொள்வார்கள்.
    சோமாரி குஜ்ராத் போகப் போகிறாராம்,
    பி.ஜே.பி. ஆட்சியிலே ஆளுனராக!
    கருமம் ஒழிந்தால் சரி.
    //

    நல்லவேளை தமிழ் நாட்டுக்கு என்று தமிழன் தலையில் மொட்டை தலையை துக்கிப் போடாமல் இருக்கும் வரை நமக்கென்ன கவலை ?

    பதிலளிநீக்கு
  20. //இந்தியாவில் இருப்பது போல கூட்டாட்சி முறையை ஏற்றுக் கொள்வதன் மூலம் தான் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். ராஜீவ்காந்தி கையெழுத்திட்ட ஒப்பந்தத்துக்கு மீண்டும் உயிரூட்டினால் தீர்வு ஏற்படும்.//

    சோ போன்ற அறிவாளிகள், தவறான அறிவுரை செய்ததால் வந்தவினை. இராஜீவ் காந்தி செய்த தவறை புதுப்பிக்கச் சொல்கிறாரா? சிங்கள அரசிடம் பட்டம் வாங்கி வரலாம் சோ. அவர்கள் தான் சோ,ராம், நாராயணன், சிவசங்கர் மேனன், இந்திய அதிகாரிகள், அமைச்சர்களுக்கு வாரம் தோறும் பட்டங்கள் வழங்குகிறாகளே. தமிழர்களை பிரித்தாள சோ போன்றவர்கள் துணை போவது ஏனோ? தமிழர்கள், இவரின் கருத்தை ஊதாசீனப்படுத்துங்கள். நன்றி!

    அன்புடன்,
    ஜோதிபாரதி.

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !