20 ஜூலை, 2006

துன்பம் வரும் நேரத்திலே... :) ங்க...

அப்படி என்ன துன்பம் வந்துவிட்டது ? அந்நியன் இருக்கிறார், பிகே ப்ளாக் இருக்கிறது, நமக்கு தெரியாத குறுக்கு வழியா ? அல்லது கிறுக்கு வழியா ? ... ஆயிரம் கைகள் மறைத்தாலும் வலைப்பூக்கள் மலர்வதையும் மணம்வீசுவதையும் எவர் தடுக்கமுடியும். டிஸ்கி போதும்னு நினைக்கிறேன். எழுதிய விசயம் முகப்பில் வருவதைத் தவிர்க்கத் தான் நீட்டி முழங்குவது.


மனைவி : என்னங்க, நான் இங்க கழுதையா கத்திக்கிட்டு இருக்கேன், நீங்க என்னன்னா காதுல வாங்காம எதையோ தேடிகிட்டு இருக்கிங்க
கணவன் : ஓ... அதுதான் இங்க இருந்த நீயூஸ் பேப்பரை காணுமா !

ஒருவர்: நீங்க சொன்ன ஜோக்குக்கு சிரிப்பு வரவில்லையே ?
மற்றொருவர்: நான் சொன்னது டியூப்லைட் ஜோக் லேட்டா தான் சிரிப்பு வரும்.

நண்பர்1 : உங்களை 'டியூப் லைட்டு' சொல்லியும், சிரிக்கிறீர்களே !
நண்பர்2 : இதை கண்டுபிடிக்க உங்களுக்கு இவ்வளவு நாள் ஆனதே என்று நினைத்தேன் அதுதான் சிரித்தேன்

நர்ஸ் : டாக்டர் நீங்க கொடுத்த தூக்க மாத்திரையை சாப்பிட்டும் அந்த பேசன்ட் எழுந்து நடந்து போரார் பாருங்க
டாக்டர் : சீக்கரம் வேகமாக போய் அவரை புடிங்க, அவருக்கு இன்னும் தூக்கத்தில் நடக்கும் வியாதிக்கு மருந்து கொடுக்கவில்லை.

பக்கத்து வீட்டுக்காரார் 1: அவன் ரொம்ப கெட்டப் பையன் சார்
பக்கத்து வீட்டுக்காரார் 2: என்ன பொண்ணுங்க கூட சுத்துரானா, இதெல்லாம் இந்த வயசில் சகஜம் விடுங்க
பக்கத்து வீட்டுக்காரார் 1 : அதுதான் இல்லை, சாமியார் ஆகப்போறானாம்

20 கருத்துகள்:

  1. துன்பமெல்லாம் இன்னும் ரெண்டுநாள் தான் போலிருக்கு. தடை விலகப்போகிறது தெரியுமில்லையா?

    பதிலளிநீக்கு
  2. //Venkataramani said...
    துன்பமெல்லாம் இன்னும் ரெண்டுநாள் தான் போலிருக்கு. தடை விலகப்போகிறது தெரியுமில்லையா?
    //
    வெங்கடரமனி... தெரிகிறது... எப்படியோ நம் காட்டில் பின்னூட்ட மழை பொழிந்தால் சரிதான் :))

    பதிலளிநீக்கு
  3. ///
    மனைவி : என்னங்க, நான் இங்க கழுதையா கத்திக்கிட்டு இருக்கேன், நீங்க என்னன்னா காதுல வாங்காம எதையோ தேடிகிட்டு இருக்கிங்க
    கணவன் : ஓ... அதுதான் இங்க இருந்த நீயூஸ் பேப்பரை காணுமா !
    ///

    தல நீங்க இன்னும் பேச்சு இலர் ஆகலைன்னு நினைக்கிறேன். அதுதான் இது மாதிரி ஜோக்ஸ் எல்லாம் போடுறீங்க.

    பதிலளிநீக்கு
  4. //குமரன் எண்ணம் said...
    தல நீங்க இன்னும் பேச்சு இலர் ஆகலைன்னு நினைக்கிறேன். அதுதான் இது மாதிரி ஜோக்ஸ் எல்லாம் போடுறீங்க. //

    'பேச்சு இலர்' ஆனாவங்க இப்படித்தான் வெளியில் புலம்பி மனச தேத்திக்கனும் :)

    பதிலளிநீக்கு
  5. கண்ணன்,

    துன்பம் வரும் நேரத்துல சிரிங்கன்னு போட்டுட்டு நல்லா கடுப்படிக்கற ஜோக்ஸா இருக்கு..

    கைப்புள்ளக்கிட்ட சொல்லி கொஞ்சம் வாய்விட்டு சிரிக்கிறா மாதிரி போடச் சொல்லுங்க:))

    பதிலளிநீக்கு
  6. //
    tbr.joseph said...
    நல்லா கடுப்படிக்கற ஜோக்ஸா இருக்கு..//


    இதுக்கு 'கடி' என்று மென்மையாக சொல்லியிருக்கலாம் :)))

    பதிலளிநீக்கு
  7. :)) - ஹி ஹி ( சிரிப்பான் மட்டும் போட்டா நல்லா இருக்காதுன்னு - ஒரு ஹி ஹி வேற போட்டுட்டேன்)

    பதிலளிநீக்கு
  8. மனைவி : என்னங்க, நான் இங்க கழுதையா கத்திக்கிட்டு இருக்கேன், நீங்க என்னன்னா காதுல வாங்காம எதையோ தேடிகிட்டு இருக்கிங்க

    கணவன் : நான் கழுதைதான் கத்துகிறதுனு நீனைத்தேன்... ::))

    பதிலளிநீக்கு
  9. சிரிப்பான்களை அள்ளித் தெளிக்கலாம் போல் இருக்கிறது. :))))))

    பதிலளிநீக்கு
  10. :))))

    //எழுதிய விசயம் முகப்பில் வருவதைத் தவிர்க்கத் தான் நீட்டி முழங்குவது.
    //
    இப்படி தான் கவிதை எழுதறேன்னு நேற்று ஒரு பதிவைப் போட்டால் கடைசி பத்தி தவிர மொத்தமும் முகப்பில் வந்துடுச்சு :(

    பதிலளிநீக்கு
  11. அண்ணாத்த, நான் கொஞ்சம் டியூப் லைட், பதிவை படிச்சுட்டேன். அப்பறமா வந்து சிரிப்பான போட்டுட்டு போறேன்.

    பதிலளிநீக்கு
  12. //சாமியார் ஆகப்போறானாம் //

    கலக்கிடீங்க...

    பதிலளிநீக்கு
  13. //மின்னுது மின்னல் said...
    கணவன் : நான் கழுதைதான் கத்துகிறதுனு நீனைத்தேன்... ::)) //
    நேரிடையாக கழுதை என்று சொல்வது பழைய ஜோக் :)))

    பதிலளிநீக்கு
  14. //குமரன் (Kumaran) said...
    சிரிப்பான்களை அள்ளித் தெளிக்கலாம் போல் இருக்கிறது. :))))))
    //
    ஜோசப் ஐயா வந்து கடின்னு சொல்லிட்டார் என்று இடிந்து போய் உட்கார்ந்திருந்தேன்.. உங்கள் மறுமொழி மருந்து போட்டுவிட்டது :))

    பதிலளிநீக்கு
  15. //கப்பி பய said... இப்படி தான் கவிதை எழுதறேன்னு நேற்று ஒரு பதிவைப் போட்டால் கடைசி பத்தி தவிர மொத்தமும் முகப்பில் வந்துடுச்சு :( //
    ஆமாங்க கப்பி... 3 வரி கவிதை எழுதினால் யாரும் பதிவில் சென்றே பார்க்கத் தேவையில்லை முகப்பில் தெரிந்துவிடும் :)))

    பதிலளிநீக்கு
  16. //Sivabalan said...
    //சாமியார் ஆகப்போறானாம் //

    கலக்கிடீங்க...
    //
    இது ஏற்கனவே கேள்விப்பட்ட ஜோக் மாதிரி தெரிகிறது. :)))

    பதிலளிநீக்கு
  17. //நாகை சிவா said...
    அண்ணாத்த, நான் கொஞ்சம் டியூப் லைட், பதிவை படிச்சுட்டேன். அப்பறமா வந்து சிரிப்பான போட்டுட்டு போறேன்.
    //
    மறந்துடாம வந்து போட்டுவிட்டு போங்கள் :))) இல்லையென்றால் உங்கள் பதிவில் வந்து திட்டுவேன் :))

    பதிலளிநீக்கு
  18. :)))))
    :)))))
    :)))))
    :)))))
    :)))))
    :)))))
    என்னடா அஞ்சு நகைச்சுவை துணுக்குக்கு இவன் ஆறு சிரிப்பான் போட்டு இருக்கானே பாக்குறீங்களா. அது நீங்க என்ன திட்டுவேன் என்று சொன்னதுக்கு
    ;)

    பதிலளிநீக்கு
  19. //ஜோசப் ஐயா வந்து கடின்னு சொல்லிட்டார் என்று இடிந்து போய் உட்கார்ந்திருந்தேன்.//

    கடி தான். ஆனா சிரிப்பும் வந்தது. :-)

    பதிலளிநீக்கு
  20. // குமரன் (Kumaran) said...

    கடி தான். ஆனா சிரிப்பும் வந்தது. :-)
    //
    குமரன் உங்கள் பதிவில் ஒரு மெய்நிகர் புதிர் எழுதினேன்.. என்னவாயிற்று... கேட்டுக்கொண்டால் நானே புதிரை விடுவிக்கிறேன் :)))

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !